சென்னை:
திரையரங்குகளில் கொரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐசிஎம்ஆர் மருத்துவர் பிரப்தீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
இதனால் திரையரங்குகளில் கொரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐசிஎம்ஆர் மருத்துவர் பிரப்தீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும்போது கொரோனா பரவும் விதம் குறைகிறது என்றும்; இதனிடையே கொரோனா இவ்வாறு தான் திரையரங்குகளில் பரவுகிறது என்றும் அட்டவணைமூலம் தெரிவித்தார். நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரப்தீப் கவுர் எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.