சென்னை,நவ.26- தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை விழா காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க் கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து, மராட்டிய மாநிலம் பன்வெலுக்கு சபரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.அதன்படி, நாகர்கோவில் சந்திப்பு - பன்வெல் (வண்டி எண்: 06075) சிறப்பு கட்டண ரயில் செவ்வா க்கிழமைகளில் வருகிற 28 ஆம் தேதி, டிசம்பர் 5, 12, 19, 26 ஆம் தேதிகள், ஜனவரி 2, 9, 16 ஆம் தேதிகளில் காலை 11.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப் பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு பன்வெல் ரயில் நிலையத்தை வந்த டையும்.
இதேபோன்று மறுமார்க்கத்தில், பன்வெல் - நாகர்கோவில் சந்திப்பு (06076) சிறப்பு கட்டண ரயில் புதன் கிழமைகளில் வருகிற 29 ஆம் தேதி, டிசம்பர் 6, 13, 20, 27 ஆம் தேதிகள், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 3, 10, 17 ஆம் தேதிகளில் பன்வெல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த வெள்ளிக் கிழமைகளில் காலை 10 மணிக்கு நாகர் கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.