tamilnadu

செல்போன் பேசியபடி பேருந்து ஓட்டிய 14 ஓட்டுநர்கள் இடைநீக்கம்

சென்னை, ஜூன் 3-செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றம் எனஉயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பேருந்து, ஓட்டும்போது செல்போனில் பேசுவதால் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அரசு மற்றும் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் செல்போன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 5 வருடங்களில் சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநர்கள் செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. 2014 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 370 புகார்கள் வந்துள்ளன.இந்நிலையில் தற்போது புகார் உறுதி செய்யப்பட்ட 14 மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள்,  3 நடத்துனர்கள் மீதுபோக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த3 மாதங்களில் நடந்த விபத்துக்களின் அடிப்படையில் இந்த 17 பேரும்இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகஅதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். பொதுமக்களும் புகார் செய்கிறார்கள். இதன் அடிப்படையில் விசாரணை செய்து மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.