tamilnadu

தென்மாவட்ட பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கம்

சென்னை,ஜன.29- தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும்  பயணிகள் வசதிக்காகவும் சென்னை  மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதி நவீன கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த டிசம்பரில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடப்பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 24 முதல் தனியார் ஆம்னி  பேருந்துகள் அனைத்தும் கிளாம் பாக்கத்திலிருந்து இயக்கப்படு கின்றன.

இந்த நிலையில், ஜன. 30 முதல்  அனைத்து போக்குவரத்து கழகங் களை சார்ந்த தென் மாவட்டங்க ளுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்து களின் புறப்பாடுகள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தி லிருந்து புறப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப் படும் பேருந்துகள் ஜனவரி 30 முதல் இயக்கப்பட மாட்டாது.

தாம்பரம் வரை  பேருந்துகள் இயக்கம்

கோயம்பேடு பேருந்து நிலை யத்திலிருந்து கிழக்கு கடற்கரை (இசிஆர்) வழியாக செல்லும் பேருந் துகள் , பூந்தமல்லி வழியாக வேலூர்,  ஓசூர், ஆம்பூர் , திருப்பத்தூர் இயக் கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலை யத்திலிருந்து இயக்கப்படும்.

இந்த பேருந்துகள் இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங் களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது, தாம்பரம் வரை  இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்திலிருந்து தென் மாவட்டங்க ளுக்கு இயக்கப்படும் என்று போக்கு வரத்து கழகம் அறிவித்துள்ளது.