tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பங்குச்சந்தையில் பணத்தை  இழந்த ராணுவ வீரர் தற்கொலை

உதகை,செப்.8- நீலகிரியில் பங்குச்சந்தை முதலீட்டால் ஏற்பட்ட கடன் தொல்லையால் ராணுவ வீரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 காஷ்மீரில் பணியாற்றி வந்த பிரபாகரன் என்ற ராணுவ வீரர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தார். கடன் செயலிகளில் கடன் பெற்றும், மனைவியின் நகை களை விற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். இதனால் அவர், கடன் தொல்லையால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராணுவ  வீரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

வழக்கறிஞர்களின் வளர்ச்சிக்கு நூலகம் உதவும்  
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

மதுரை,செப்.8- உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எம்பிஏ) புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறப்பு  விழா நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பேசுகையில், “மதுரையின் அடையாளம் மீனாட்சியம்மன் கோவில், ஜல்லிக்கட்டு, நீதிக்காக போராடிய சிலப்பதிகார கண்ணகி. அந்த பட்டியலில் உயர் நீதிமன்ற மதுரை  அமர்வும் இடம் பெற்றுள்ளது. முன்பு வழக்கறிஞர்களாக இருந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் வழக்கறிஞர்களாக வந்தனர். தற்போது 90 சதவீதம் முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் உள்ளனர்.

வழக்கறிஞர்களுக்கு நூலகம் முதுகெலும்பு போன்றது. வழக்கறிஞர் சங்கத்தின் டிஜிட்டல் நூலகம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் நூலகத்தை அனைத்து வழக்கறிஞர்களும் தவறாமல் பயன்படுத்த வேண்டும். இதனால் வழக்கறிஞர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

தில்லி பல்கலை. விடுதியில்  தமிழக மாணவி சடலம்

புதுதில்லி,செப்.8- தில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழக விடுதியில் சென்னையை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி சடலமாக  மீட்கப்பட்டார். மூனாறம்  ஆண்டு எல்எல்பி படித்து வந்தார். நீண்ட நேரமாகியும் விடுதி அறையிலிருந்து வெளியே வராததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள்  சென்று பார்த்த போது,  மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.அக்கடிதத்தில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, மனம் சார்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

செயற்கை நுண்ணறிவை  கற்கும் நடிகர் கமல்ஹாசன் 

சென்னை,செப்.8- பிரபல நடிகர் கமல்ஹாசன் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான கிராஷ்  கோர்ஸ் படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தில் 90 நாள் படிப்புக்கு சேர்ந்துள்ளார். இருப்பினும், அவர் தனது பணிகளை நிறைவேற்ற இந்தியா திரும்புவதற்கு முன், 45 நாட்களுக்கு மட்டுமே வகுப்பு களில் கலந்து கொள்வார் என கூறப்படு கிறது.

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்!

சென்னை, செப்.8- வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கட லில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றது. இது மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு வடக்கு-ஒடிசா-கங்கை மேற்கு வங்காளம் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகu அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கைதிக்கு வீட்டு வேலை: டிஐஜி மீது வழக்கு

சென்னை, செப்.8- ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டிஐஜி ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி கொடுமைப்படுத்தியதாகவும் சிவ குமாரின் தாய் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டிஐஜி உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.