சென்னை:
சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கர் கண்டுபிடித்துள்ளார்.
இதற்காக மாணவிக்கு ஸ்வீடன் நாட் டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இள வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து மாணவி வினிஷா கூறுகையில், நான் வடிவமைத்த இஸ்திரி பெட்டி உள்ள வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை 100 ஏ.எச். திறன் கொண்ட மின்கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மின்கலனை முழுமையாக மின்னேற்றம் செய்ய5 மணி நேரம் சூரிய ஒளி தேவை. இதன் மூலம் 6 மணிநேரம் வரை தொடா்ச்சியாக இஸ்திரி செய்ய முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிய எனக்கு 2 மாத காலமானது.
இதன் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக் கட்டளையின் பொறியாளர்கள் வடிவமைத்து, காப்புரிமை பெற விண்ணப் பித்துள்ளளர். இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமையும் கிடைத்து விடும். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடாமல் இயங்கும் வகையிலான உபகரணங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று தெரிவித்தார். ஏற்கெனவே இந்த மாணவி தானாகவே இயங்கும் வகையில் அறிதிறன் மின்விசிறியைக் கண்டறிந்திருந்தார்.