tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விரைவில் சுமூக 
முடிவு எட்டப்படும்:
செல்வப்பெருந்தகை

சென்னை,  பிப். 28 - தமிழ்நாடுகாங்  கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை மேலிடத் தலைவர்களின் அழைப்பை ஏற்று  தில்லிக்குச் சென் றிருந்தார். அங்கு தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, புதனன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, “தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தைகளின் போது காலதாமதம் ஏற்படுவது இயல்புதான். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? எந்தெந்த இடங்களில் களம் காண்பது என்பது பற்றி திமுக தலைமையுடன் தில்லி மேலிட தலைவர்கள் தொடர்ந்து  பேசி வருகின்றனர். இந்த பேச்சு வார்த்தையில் விரைவில் சுமூக உடன் பாடு எட்டப்படும்” என்றார்.

அதிமுகவுக்கு 
இரட்டை இலை சின்னத்தை 
ஒதுக்கக் கூடாது!
உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, பிப்.28- திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்  துள்ளார். அதில், “அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல்  ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ஆம்  ஆண்டு வரை புகார்கள் அளித்துள் ளேன். உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்தி ருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது. இது தொடர்பாக தேர்  தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்  டும்” என வலியுறுத்தியுள்ளார்.