tamilnadu

img

திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

சென்னை, ஆக. 26 - பள்ளிக்கல்வி த்துறை இயக்குநர கம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், வினாடி - வினா மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்கீழ் பள்ளி அளவிலான திறன் மேம்பாட்டுப் போட்டிகளை 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஆண்டு அட்டவணையில் ஒதுக்கப்பட்ட பாட வேளைகளுக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும்.

இந்த செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்படுவது அவசியம். இந்த போட்டிகள் அடுத்தடுத்து வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும். இதில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். போட்டிகள் நடைபெறுவதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைத்து வகை மன்ற போட்டிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.