tamilnadu

img

சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் தொடர்கிறது

இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவ ரத்தினங்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி நினைவுச் சொற்பொழிவு வியாழனன்று (டிச.14) சென்னையில் நடைபெற்றது. 
இந்த நிகழ்வில் ‘கார்ப்பரேட் மதவாத கூட்டணி - இந்திய அரசியலமைப்பு சட்ட ஜனநாயகம் சீர்குலைப்பு’ எனும் தலைப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் பகுதிகள்: 

இந்திய கம்யூனிச இயக்கத்தின் மிக உயர்ந்த முன்னோடியாக தோழர் பி.ராம மூர்த்தி அவர்கள் திகழ்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது இருந்த 9 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராக, கட்சிக்கு வழிகாட்டும் முன்னோ டியாக இருந்தார். அவரை சந்திக்கும்போது மாணவனாக இருந்தேன். அவரை சந்திக்கும் முன்பே அவரது பன்முகப் பரிமாணங்களை அதிகம் தெரிந்து கொண்டேன். மயிலாப்பூர் சி.பி.கோவில் தெருவில் கூட்டுக் குடும்பமாக வசித்தோம். என்னுடைய மாமா, கல்லூரிக் காலத்தில் கல்லூரியை மட்டம் போட்டுவிட்டு தோழர் பி.ஆர். பேச்சைக் கேட்கச் செல்வோம் என்று அடிக்கடி கூறுவார். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பி.ஆரின் பேச்சும், செயல் பாடும் இருந்தது. என்னுடைய மாமா கம்யூனிச இயக்கத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர். அத்தகையவர்களைக் கூட ஈர்க்கும் ஆற்றல் பி.ஆரிடம் இருந்தது.

எத்தனை எத்தனை முகங்கள்
தோழர் பி.ஆர். மிகப்பெரும் அரசியல் தலை வராக, தேசிய தலைவராக, மார்க்சிய லெனினிய சிந்தாந்தவாதியாக, விடுதலைப் போராட்ட வீரராக, தொழிற்சங்கத் தலை வராக, நாடாளுமன்றவாதியாக, சென்னை மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, கட்சிப் பத்திரிகையின் ஆசிரியராக, பிரச்சா ரகராக என பல்வேறு பரிமாணங்களை கொண்டி ருந்தார். மொழியில் அவருக்கு அலாதியான ஆற்றல் இருந்தது.

தோழர் சுர்ஜித் சொன்னது
1970களில் உத்தரப் பிரதேச பார் கவுன்சில் தேர்தலில் சிபிஎம் தோழர்கள் வெற்றி பெற்ற னர். அது தொடர்பான கூட்டத்தில் சென்று ஆங்கி லத்தில் பேசத் தொடங்கினர். வலதுசாரி வழக்க றிஞர்கள் ரகளை செய்து இந்தியில் பேச வற் புறுத்தினர். தோழர் பி.ஆர்., ஒருபடி மேலே சென்று ஒன்றரை மணி நேரம் சமஸ்கிருதத்தில் உரையாற்றினார். அனைவரும் வாயடைத்து நின்றனர். தோழர் பி.ஆர். இலக்கியங்களை கரைத்துக் குடித்தவர். வேதங்கள் தொடங்கி காளிதாசர் எழுத்துக்கள் வரை எதையும் குறிப்புகள் இன்றி,  சரளமாக மேற்கோள் காட்டுவார். தோழர் பி.ஆர். மறைவின்போது “எனது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை யில் இவ்வளவு திறமைபெற்ற, பன்முக பரிமாணங்களைக் கொண்ட கம்யூனிஸ்ட்டைப் பார்த்ததில்லை” என்று தோழர் சுர்ஜித் குறிப் பிட்டார். தோழர் சுர்ஜித்திற்கு இருந்த அனுப வம், பல பகுதி மக்களோடு, தலைவர்களோடு இருந்த பரந்துபட்ட தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கி ஒப்பிட்டு, தோழர் பி.ஆரை புகழ்ந்துரைத்தார்.

பி.டி.ரணதிவேயும், பி.ஆரும்
ஜெர்மன் நிறுவனமான சீமென்ஸ், பெல் நிறுவனத்தை விழுங்க இருந்தது. அந்த நேரத்தில் பி.ஆர். நடத்திய போராட்டத்தின் காரணமாக இன்று வரை பெல் நிறுவனம் பொ துத்துறையாக நீடிக்கிறது. அன்றைக்கு சிஐடியு தலைவர் பி.டி.ரணதிவே, பொதுச்செயலாளர் பி.ராமமூர்த்தி இருவரும்  காலை 7 - 8 மணிக்கு  சந்தித்துப் பேசுவார்கள். இரண்டு பேரும் அந்த ஒரு மணி நேரம் பேசுகிற பேச்சு, உதவிக்காக நின்றிருக்கும் எனக்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது. உலகம் முழுக்க நடப்பதை, சோவியத் யூனியன், ஏகாதிபத்திய நடவடிக்கை கள் என மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை கடைபிடிப்பவர்கள் என்னவெல்லாம் பேசு வார்களோ அத்தனையையும் அந்த ஒரு மணி நேரத்தில் விவாதித்து முடிப்பார்கள்.

தோழர் பி.ஆர். மறைந்தபோது இரங்கல் உரையாற்றிய பி.டி.ஆர்., “தோழர் பி.ஆர். ஒரு வரலாற்று ரீதியான தொடர்பாக இருந்தார். விடுதலைப் போராட்டத்தை, தொழிற்சங்க இயக்கத்தோடு; கம்யூனிச இயக்கத்தோடு, இணைத்தார். விடுதலைப் பெற்ற பிறகும்,  உழைப்பாளி மக்களுக்கான போராட்டங்க ளோடு, ஏகாதிபத்திய எதிர்ப்போடு இணைத் தார். இந்தியாவில் சுரண்டலற்ற சோசலிச சமூக அமைப்பு உருவாக்க வேண்டும் என்ப தற்கான இணைப்பாக பி.ஆர்.,இருந்தார்” என்று குறிப்பிட்டார்.

காந்தியின் அழைப்பை ஏற்று...
காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறி வித்தபோது, அதனை ஏற்று மாணவர்கள் கல்விச் சாலைகளை புறக்கணித்தனர். அப்போது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று பி.ஆரும் தனது படிப்பைக் கை விட்டார். பனாரஸ் சென்று ஒரு கல்விச்சாலை யில் சேர்ந்தார். அந்த நேரத்தில் சௌரி சௌரா சம்பவத்தை தொடர்ந்து ஒத்துழை யாமை இயக்கத்தை காந்தி கைவிட்டார்.

ஒத்துழையாமை இயக்கம் மக்களிடத்தில் கொந்தளிப்பை உருவாக்கியது. மக்களிடத்தில் விடுதலை வேட்கையை ஏற்படுத்தி   உச்ச கட்டத்தில் இருந்தது. அந்த சமயத்தில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டது பல பகுதி மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஒத்துழையாமை இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியபோது ஏன் கைவிட்டீர்கள் என்று காந்தியிடம், நேரு கூட கேள்வி எழுப்பினார். காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டது தனியான வரலாறு.

ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி கைவிட்டதால், இளைஞர்களிடம் ஒரு மாற்றைத் தேட வேண்டும் என்கிற பேரார்வத்தை ஏற்படுத்தியது. தோழர் பி.ஆருக்கும் மாற்றைத் தேடும் ஆர்வம் ஏற்பட்டது. அதற்குப் பிறகும் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தார். லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் (1929) பிரதிநிதியாக பங்கேற்றார். அந்த மாநாட்டில்தான், ‘பூரண சுதந்திரம் வேண்டும்’ என்ற முழக்கம் கம்யூ னிஸ்ட்டுகளால் முன்மொழியப்பட்டது வரலாறு. அன்றைக்கு கம்யூனிஸ்ட்டுகள் முன்மொழிந்த தீர்மானம்தான், இன்றைய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையாக உள்ளது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில்....

இதற்குப் பிறகு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் பி.ஆர். தன்னை இணைத்துக் கொண்டார். 1936இல் கம்யூனிஸ்ட் கட்சியில்  இணைந்தார். காங்கிரஸ் கட்சி, ஒத்துழை யாமை இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி,  கம்யூனிச இயக்கம் என படிப்படியாக நிகழ்ந்த அவரின் அரசியல் மாற்றம், நூற்றாண்டுக்கு பிறகும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது. லாகூர் காங்கிரஸ் மாநாட்டில், கம்யூனிஸ்டுகள் முன்மொழிந்த தீர்மானம், அது முன்வைத்த விழுமியங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம், இன்றை க்கு ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.

நாடு விடுதலை பெற்ற காலத்தில் நவீன இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற கண்ணோட்டம் முன்வைக்கப்படுகிற போது, வெவ்வேறு விதமான தத்துவார்த்த, சித்தாந்த நீரோட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

கம்யூனிஸ்ட் கட்சியின் உதயம்
1920களில் ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டது. அதே 1920ல் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முதல் கிளை தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது. 1925ல் இந்தியாவில் இருந்த அனைத்து கம்யூனிஸ்ட் குழுக்க ளும் இணைந்து கான்பூரில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டிற்கு ம.சிங்காரவேலர் தலைமை தாங்கினார். அதே போன்று 1925ல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது. 1928-31 காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் லாகூர், கராச்சி மாநாடுகளில், சுதந்திர இந்தியாவின் அடிப்படை குணாம்சம் எப்படி இருக்க வேண்டும்; நவீன இந்தியா எந்த உள்ளடக்கத்தோடு இருக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்ட காலகட்டம் அது.

மூன்று விதமான பாதைகள்...

மூன்று விதமான சித்தாந்த நீரோட்டங்கள் மக்களிடத்தில் முன்வைக்கப்பட்டது. ஒன்று, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்த கண்ணோட்டம். அதாவது மொழி, மதம், கலாச்சாரம் என்று  ஏராளமான வேறுபாடுகள் கொண்ட இந்தி யாவின் பன்முகத்தன்மையை அடிப்படையாக கொண்டு மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப் பாக இருக்க வேண்டும் என்றார்கள். இவை லாகூர் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இரண்டு, கம்யூனிச இயக்கத்தின் கண்ணோட்டம். மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்போடு, சோசலிசத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்போதுதான் தேச விடுதலைப் போராட்டத்தினுடைய முடிவாக கிடைத்துள்ள அரசியல் சுதந்திரம், ஒவ்வொரு இந்தியனுடைய பொருளாதார சுதந்திரமாக மாறும். எனவே, சோசலிசத்தை நோக்கிப் பய ணிக்க வேண்டும் என்றனர். இது, காங்கிரஸ் கூறிய கண்ணோட்டத்துடன்  முரண்பட்டது அல்ல. காங்கிரஸ் கூறிய வழிமுறையை ஏற்று,  அத்தோடு சோசலிசத்தை முன்வைத்தனர்.

மூன்றாவதாக, ஆர்எஸ்எஸ் கண்ணோட் டம். அது, முந்தைய இரண்டு கண்ணோட்டங்க ளில் இருந்து மாறுபட்டது, முரண்பட்டது. இந்தி யாவின் அடிப்படை குணாம்சம் மத அடிப்படை யில் இருக்க வேண்டும் என்றார்கள். இஸ்லா மிய குடியரசுஎன்று முஸ்லீம் லீக் முன் வைத்தது. இந்துராஷ்டிரம் என்று ஆர்எஸ்எஸ் முன்வைத்தது. இரண்டு தேசங்கள் என்ற நிலைபாடு 1923ஆம் ஆண்டு சாவர்க்கரால் முதலில் முன்மொழியப்பட்டது.
கம்யூனிஸ்டுகளின் எழுச்சி
1930, 40களில் கம்யூனிஸ்ட்டுகள் மிகப் பெரும் போராட்டங்களை நடத்தினர். அதில், தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டியதில் தோழர் பி.ஆரின் பங்களிப்பு மிகச்சிறந்தது. அதேபோன்று விவசாயிகளுக்கான போராட்டம்  நடைபெற்றது.  தெலுங்கானா ஆயுதம் தாங்கிய எழுச்சியின் விளை வாக 10ஆயிரம் கிராமங்கள் அடக்குமுறை யிலிருந்து விடுதலைபெற்றன. அந்த காலக் கட்டத்தில்தான் கேரளாவின் புன்னப்புரா வயலார், மேற்குவங்கத்தில் தேபாகா, மகா ராஷ்டிராவில் வொர்லி ஆதிவாசிகள், அசாமில் சோமவாலி போராட்டம், தமிழ்நாட்டில் கிழக்குத் தஞ்சை எழுச்சி என்று ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்கள் குறிப்பிடத்தக்க மாற் றங்களை, அழுத்தங்களை, தாக்கங்களை ஏற்படுத்தின. தொழிலாளி வர்க்கம் கப்பற் படை எழுச்சி, அதையொட்டி நடைபெற்ற போராட்டங்கள், மும்பை தொழிலாளி வர்க்கம் வீதியில் இறங்கி போராடியது, வேலை நிறுத்தம் செய்தது. இத்தகைய போராட்டங்கள்தான்  இந்தியாவில் தொழிலாளர், தொழிற்சங்க உரிமைகளை நிலைநிறுத்தப்படுவதற்கு காரணமாக இருந்தன. கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கி நடத்திய தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்கள்தான் தேச விடுதலைக்கான போராட்ட நிகழ்ச்சி நிரலையே மாற்றி அமைப்பதற்கு முயற்சித்தது. விவசாயி கள் போராட்டத்தால்தான் ஏராளமான நில உரிமைகள் கிடைத்தன. தொழிலாளி வர்க்கப் போராட்டத்தினால்தான், தொழிலாளர் நலன்க ளுக்கு சாதகமான சட்டங்கள், உரிமைகள் வந்தன.

மொழி வழி மாநிலங்கள்
மொழிவழி அடிப்படையில் ஐக்கிய கேரளம், விசாலா ஆந்திரா, சம்யுக்த மகா ராஷ்டிரா என மாநிலங்கள் அமைய வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கி போராட்டம் நடத்தினர். பல்வேறு குழுக்கள், அமைப்புகள் இணைந்தும் இந்தப்  போராட்டங்களை நடத்தினர். நவீன இந்தியா  எப்படி இருக்க வேண்டும் என்று கம்யூ னிஸ்ட்டுகள் முன்வைத்த அந்தக் கண்ணோட் டம், வெறும் தீர்மானமாக, வார்த்தையாக இல்லாமல், அந்த லட்சியத்தை நிறைவேற்ற போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்களில் தோழர் பி.ஆர்.முக்கியப் பங்காற்றினார். தேசிய இயக்கம் முன்வைத்த மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பு என்ப தோடு, சமத்துவம் நிறைந்த, சுரண்டலற்ற, சோசலிச சமூகத்திற்கு பாதை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த போராட்டங்கள் நடந்தன. இதில் பி.ஆரின் பங்களிப்பு சிறப்பானது.

தேசப் பிரிவினை

நாட்டின் விடுதலையையொட்டி இந்தியா - பாகிஸ்தான் எனும் பிரிவினை ஏற்பட்டது. அந்த நேரத்தில், ஆர்எஸ்எஸ், இந்துத்துவா வலதுசாரி சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வகுப்புவாத கலவரங்கள், வன்முறைகளை நிகழ்த்தினர். ஒரு இஸ்லாமிய குடியரசாக பாகிஸ்தான் சென்றதால், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டுமென்ற அழுத்தத்தை ஆர்எஸ்எஸ், இந்துத்துவ சக்திகள் கொடுத்தன. கம்யூனிஸ்ட் இயக்கம் இயல்பாக அதை நிராகரித்தது. காங்கிரஸ் தலை மையிலான தேசிய இயக்கமும் அதை நிராக ரித்தது. அந்த காலக்கட்டத்தில் இந்து ராஷ்டி ரமாக அறிவிக்க காந்தி தடையாக இருக்கி றார் என்பதற்காக படுகொலை செய்யப் பட்டார். ஆர்எஸ்எஸ், இந்துத்துவா வலதுசாரிக் கும்பல் அன்று தொடங்கிய அந்த தாக்குத லும், சவாலும் நிற்கவில்லை.

விடுதலைக்கு பின், காந்தி கொல்லப்பட்டு, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்தார். அதன் பிறகு ஆர்எஸ்எஸ் அபாயம் குறைந்து விட்டது என்று கூறு கிறார்கள். இன்றுவரை ஆர்எஸ்எஸ்- ஆபத்தும், அபாயமும் தொடர்ந்து வருகிறது. அரசியல் கட்டமைப்பு, அரசியல் சாசனம், மதச்சார்பற்ற ஜனநாயக கோட்பாடுகளோடு இருக்க வேண்டும் என்பதை மாற்றி, வகுப்புவாத, பாசிச பாணியில் இந்துத்துவ ராஷ்டிரமாக நாட்டை உருவாக்க, அரசியல் சாசனத்தை  திருத்த முயற்சித்து வருகின்றனர். 

எனவே, சுதந்திரத்திற்கு முன்பு இருந்து தொடங்கிய இந்த மூன்று சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம் இன்றைக்கும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான், சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக, நாடாளுமன் றத்தில் பாஜகவிற்கு மிகப்பெரும் பெரும்பான் மை கிடைத்திருக்கிறது. இதைபயன்படுத்தி, அவர்களது சித்தாந்த கண்ணோட்டத்தை நிறைவேற்றும் திசையில் நகர்ந்து கொண் டிருக்கிறார்கள். அதற்காக நாம் பாதுகாக்க விரும்புகிற அரசியலமைப்பு சட்டம், மதச்சார் பற்ற ஜனநாயக கோட்பாடுகளை  சிதைக்க முயற்சித்து வருகின்றனர்.

தொகுப்பு : செ.கவாஸ்கர்