சென்னை, மார்ச் 2020 மார்ச் மாதத்திற்கான முழு சம்பளத்தை தனது பணியாளர்களுக்கு வழங்குவதாக இந்திய டிராக்டர் நிறுவனங்களில் ஒன்றான சோனாலிகா அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களாக மாத சம்பளம் பெறுவோர், ஒப்பந்தத் தொழிலாளர், தற்காலிக ஊழியர், தொழிற்பயிற்சி பெறுவோர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் இது பொருந்தும். தற்போது பரவி வரும் கோவிட் 19 தொற்று பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காலத்தில், தனது சமூக ஒத்துழைப்பின் வெளிப்பாடாக, சோனாலி டிராக்டர்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இதனை சோனாலிக செயல் இயக்குனர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார் மேலும், தற்போதுள்ள சூழலை எதிர்கொள்ள உடனடியாகத் தேவைப்படலாம் என எண்ணி, நடப்பு 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதச் சம்பளத்தில் 20 நாட்களுக்கான சம்பளத் தொகையை முன்பணமாக எல்லா தொழிலாளர்களுக்கும் உடனே வழங்கிடவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.