புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை கடலூர் நகரில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் துவக்கி வைத்தார். உடன் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், எம்.மருதவாணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
****************
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்தி சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் முத்து, பேராசிரியர் இளங்கோவன், நகர் குழு உறுப்பினர் கலியமூர்த்தி, செந்தில், குமராட்சி முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
****************
கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடைபெற்ற கையெழுத்து இயக்கம்.
****************