tamilnadu

img

சென்னையில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு...  

சென்னை 
தென் சென்னை பகுதியான காரம்பாக்கம் போரூர் நகருக்கு அருகில் உள்ளது. இந்த பகுதியில் முழு ஊரடங்கு நாளான இன்று (ஆக., 23) இரு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை பற்றி உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

மோதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 22 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் ஆவர். இந்த கும்பல் மோதலில் கார்த்திக் (22), விக்னேஷ் (21), சங்கர்(22), கார்த்திக் (22) 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

;