சென்னை, ஜூன் 15- சென்னையில் செவ் வாய் கிழமை (ஜூன் 16) முதல் தினசரி 2 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா. வெள்ளையன் அறி வித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலை யில், ஊரடங்கை கண்டிப் பாக அமல்படுத்த மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் தா.வெள் ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
சென்னையில் கொரோனா தொற்று வேக மாகப் பரவுவதை கவ னத்தில் கொண்டு, நாட்டின் நலன், மக்கள் நலன் மற்றும் வணிகர்களின் நலன் கருதி, பரவலைத் தடுக்கும் வகையில் ஜூன் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதி யம் 2 மணி வரை மட்டுமே கடைகளை திறப்பது என்று மத்திய சென்னை, வட சென்னை, தென்சென்னை ஆகிய மூன்று மாவட்ட நிர்வா கிகள் சேர்ந்து முடிவு செய்துள்ளனர். வணிகர்களும், பொது மக்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானி டைசர் உபயோகப்படுத்த வேண்டும், வணிகர்களும், பொதுமக்களும் தேவை யில்லாமல் வெளியில் வரு வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.