சென்னை, செப். 30 - அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த ஷமீம் அக மதுவை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்க ளன்று (செப்.30) காலை நடந்த பதவி யேற்பு விழாவில் நீதிபதி ஷமீம் அக மதுவுக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற சக நீதிபதிகள், ஒன்றிய, மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர்.
நீதிபதி ஷமீம் அகமது பதவியேற்பு மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற் போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. தற்போதும், 8 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.