tamilnadu

img

பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு 

மாதர்சங்கம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி, மே 16 - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதை வரவேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உளுந்தூர்பேட்டை நகரக்குழு சார்பில்  பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது இதை பார்த்துக் கொண்டிருந்த  பழ வியாபாரம் செய்து வரும் பெண்மணி ஒருவர்  இரண்டு கிலோ இனிப்போடு வந்து இந்த நிகழ்ச்சியில் என்னுடைய பங்களிப்பாக இந்த இனிப்பையும் அனை வருக்கும் வழங்குங்கள் என்றார். மேலும் தமிழ்நாட்டில் பெண்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் பெண்களுக்காக நியாயம் கேட்டு போராடும் உங்கள் அமைப்பு வாழ்க என வாழ்த்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். நகர செயலாளர் வீ.சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான இ.அலமேலு, எஸ்.பேபிலட்சுமி, ரீட்டா, சமையா, பழனியம்மாள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.