tamilnadu

img

தீக்கதிர் செய்திகள்

செந்தில் பாலாஜி காவல்
சென்னை,  மார்ச் 13- சென்னை புழல்  சிறையில் அடைக் கப்பட்டுள்ள முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,  காணொலி காட்சி  மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி  முன்பாக புதனன்று ஆஜர்படுத்தப்பட் டார். அப்போது, அவருக்கு 26-ஆவது முறையாக மார்ச் 18 ஆம் தேதி வரை நீதி மன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி  உத்தரவிட்டார். 

‘கலைஞர் எழுதுகோல்’ விருது விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை, மார்ச் 13- சிறந்த இதழியலாளருக்கு ஆண்டு தோறும், ஜூன் 3 அன்று “கலைஞர்  எழுதுகோல் விருது” வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்  கப்பட்டுள்ளன. பத்திரிகைப் பணியை  முழுநேரப் பணியாகக் கொண்டிருப்ப வர்கள், இதழியல் துறையில் சமூக மேம்  பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்க ளின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின்  முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றி யிருப்பவர்கள் உரிய ஆவணங்களுடன் “இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்  துறை, தலைமைச் செயலகம், சென்னை- 600 009” என்ற முகவரிக்கு 30.4.2024க் குள்ளாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெ டுக்கப்படுவோருக்கு ரூபாய் ஐந்து லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றும் வழங்கப்படும்.

காவிரி ஆற்றில் திடீரென அதிகரித்து, குறைந்த நீர்வரத்து!

தர்மபுரி, மார்ச் 13- கர்நாடக அணைகளில் இருந்து  கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  தண்ணீர் திறக்கப்பட்டதாக தக வல்கள் வெளியாகின. இந்த நீரானது  புதன்கிழமை காலை தமிழக - கர்நாடக  எல்லையான பிலிகுண்டுலுவை  வந்தடைந்தது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து புதன்  கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக அதி கரித்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் வந்த நீரின் அளவானது 8 மணி  நிலவரப்படி திடீரென குறைய தொடங்கி, விநாடிக்கு 2500 கன அடி யாக மீண்டும் சரிந்தது.