tamilnadu

img

உலக தாய்மொழி தினத்தையொட்டி கருத்தரங்கம்

உலக தாய்மொழி தினத்தையொட்டி தமுஎகச சார்பில் திருநின்றவூரில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் வைகறைச் செல்வன் கருத்துரையாற்றினார். மேலும் எழுத்தாளர் கார்த்திகேயன் எழுதியுள்ள ‘பண்ணைபுரத்து பாலவன்’, ‘இசைஞானியான இளயராஜாவின் கதை’ ஆகிய இருநூலை,  மாவட்டச் செயலாளர் அந்தோணி வெளியிட ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜி.விஸ்வநாத்  பெற்றுக்கொண்டார். ‘வெங்கடேசன்’ திரைப்பட இயக்குநர் மகாசிவன் வாழ்த்துரை வழங்கினர்.  மாவட்டத் தலைவர் பாரி, அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். மோசஸ்பிரபு, கிளைத் தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.