சென்னை, மார்ச் 18- தொழில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த, 20 கடைகளுக்கு, வருவாய் துறையினர், ‘சீல்’ வைத்தனர். திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட, 4, 5, 6 மற்றும் 10வது வார்டில் உள்ள, எர்ணாவூர், பஜனை கோவில் தெரு, ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர், வடக்கு மாதா தெரு, சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த, மளிகை கடை, டீ கடை, துணிக் கடை, குளிர்பான கடை உள்ளிட்ட, 20 கடைகள், தொழில் உரிமம் இல்லாமலும், தொழில் வரி செலுத்தாமலும் செயல்பட்டு வந்தன. அந்தந்த கடைகளுக்கு, மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள், முறையாக, ‘நோட்டீஸ்’ வழங்கினர். அதன் பின்னரும், உரிமம் இல்லாமலும், தொழில் வரி செலுத்தாமலும் கடைகளை நடத்தி வந்தனர். வருவாய் துறையினர் அனைத்து கடைகளுக்கும் புதனன்று, ‘சீல்’ வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.