tamilnadu

img

தடை செய்யப்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை, ஜூலை 10- திருவண்ணாமலை நகரில் கொரோனா பரவல் காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதி களில் திறக்கப்பட்ட கடைகளுக்கு  நக ராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் சீல் வைத்தனர். திருவண்ணாமலை நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் இது வரை 30 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி, மாவட்ட நிர்வாகம் அறிவித்தன. இதை யடுத்து அங்குள்ள கடைகள் வணிக நிறு வனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் தடையை மீறி காய்கறி,  மளிகைக் கடை, மொத்த விற்பனை  அங்காடி, ஏஜென்சி என  4 கடைகள்  திறக்கப்  பட்டன. இதுகுறித்து திருவண்ணாமலை நகராட்சிக்கு தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஊழியர்கள் கடைகளை மூடி சீல் வைத்தனர்.