tamilnadu

img

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்.15 வரை நட த்தப்பட்டது.

அதேபோன்று 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப். 7 முதல் 17ஆம் தேதி வரையும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 8 முதல் 24ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன.

இறுதித்தேர்வு முடிந்தவுடன், பள்ளி மாணவர்களுக்கு ஏப்.25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 2 ) முதல் திறக்கப்பட்டன.

விடுமுறை முடிந்து பள்ளி வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே, பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.