சென்னை,ஜன.1- அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்த செவ்வாய்க்கிழமை (ஜன.2) பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டின் மாநில பாடத்திட்டத் தில் 1 முதல் 7 வரை பயிலும் மாணவர்க ளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு, 8 முதல் 12 ஆம் வரை பயிலும் மாணவர் களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த 7 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் டிச.13 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
. இதையடுத்து தேர்வுகள் நடை பெற்று வந்தன. அதே வேளையில் டிச.18-ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ததால் அவற்றில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள் எப்போது நடத்து வது என்பது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது.
இதனிடையே அனைத்து வகுப்பு களுக்கும் டிசம்பர் 22 ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு டிச.23 முதல் ஜன.1ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு, இரண்டாம் பருவத் தேர்வு விடு முறை அறிவிக்கப்பட்டது. இதை யடுத்து விடுமுறைக்குப் பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் ஜன.2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து செவ்வா யன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைச்சர் விரிவான ஆய்வு செய்தார்.
பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி, பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.