tamilnadu

நவம்பரில் பள்ளி திறப்பு என்பது தவறான தகவல் - அமைச்சர் செங்கோட்டையன்

கோபி, ஆக. 7- நவம்பரில் பள்ளி திறப்பு என்பது தவறான தகவல் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள கோட்டுப்புள்ளாம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பூசாரியூரில் 82 விவசாயிகளுக்கு கறவைமாடு மற்றும் இளம்கன்று வளர்ப்பிற்கு ரூ.67.30 மதிப்பிலான கடனுதவி வழங்கிய பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது’ கூறுகையில், நவம்பரில் பள்ளி திறப்பு என்பது தவறான தகவல். இதுவரை எவ்வித முடி வும் எடுக்கவில்லை. இதுகுறித்து மாண வர்கள், பெற்றோர்கள் மனநிலை அறிந்து கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே முதல்வர் முடிவெடுப்பார். இந்நிலையில், துறை சார்பாக எந்த தகவலும் தரவில்லை என தெரிவித்துள்ளார்.