tamilnadu

img

ஜானகிபுரம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் பள்ளிக் கட்டடம்

மதுராந்தகம்,பிப்.25- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற் குட்பட்ட ஜானகிபுரம் ஊராட்சியில்  ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஜானகி புரம், தண்டலம், சானூர் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. இதில் மாணவர்கள் படித்து வரு கின்றனர். ஆனால் பழமை வாய்ந்த 3 கட்டங்கள் இடிக் கப்படாமல் உள்ளதால், இது எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்திலேயே மாண வர்களும், ஆசிரியர்களும் உள்ளனர். மேலும், பள்ளியின் நுழை வாயிலில் பயன்படுத்தப் படாத  கிணறு ஒன்றும்  உள்ளது. ஏதாவது விபத்துக் கள் ஏற்படுவதற்கு முன்பு கிணற்றை மூட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பள்ளியில் நீண்ட காலமாக தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு பட்ட தாரி ஆசிரியர் பணியிடங் கள் காலியாவே உள்ளது. இதனால் பள்ளியின் மாண வர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின் றது. பள்ளிக்குத் தேவையான ஆசிரியர்களை நியமிப்பது டன் பள்ளிக்குச் சுற்றுச்சு வரும் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.