tamilnadu

img

சூளைப்பள்ளம் அடையாறு கரையோர குடியிருப்புகளை அகற்ற திட்டம்

சென்னை மாநகராட்சி 137 வது வட்டம், சூளைப்பள்ளம் அடையாறு கரையோர குடியிருப்புகளை அகற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்கான தகவலை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்காமல் திங்களன்று (நவ.11) அப்பகுதிக்கு காவல்துறையோடு அதிகாரிகள் கணக்கெடுக்க வந்தனர். இதனையறிந்து மார்க்சிஸ்ட் கட்சியினரும், அப்பகுதி மக்களும் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.