சத்யபிரதா தில்லி பயணம்
சென்னை, மார்ச் 13- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, நாடு முழு வதும் உள்ள தேர்தல் பார்வையாளர்கள், சட் டம்-ஒழுங்கு பணி களை கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோ ருக்கு பயற்சிகளை அளித்து வந்தார். இந்நிலையில், 2 நாள் பயணமாக திடீ ரென தில்லி புறப்பட்டு சென்றுள்ளார். மக் களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில், சத்ய பிரதா சாகுவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு
சென்னை, மார்ச் 13- முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று, பட்ஜெட்டின் போது, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அதன டிப்படையில், நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் பங்கேற்பு; அமைச்சர் புறக்கணிப்பு!
ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற, கால் நடை பல்கலைக்கழ கத்தின் 23-ஆவது பட்ட மளிப்பு விழாவை, அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் புறக்கணித்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என். செல்வகுமார் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இருவரின் பதவிக் காலத்தையும் ஏப்ரல் 9-ஆம் தேதியில் இருந்து ஓராண்டு காலம் நீட்டித்து ஆளு நர் உத்தரவிட்டுள்ளார். இரு துணைவேந் தர்களும் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பதவி நீட்டிப்பு ஆணையை பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் ஒப்பு தல் இல்லாமல் மேலும் ஒரு ஆண்டுக்கு பதவியை நீட்டித்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கால்நடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் புறக்கணித்தார்.