சென்னை, பிப்.27- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விற்பனை வாய்ப்புக்களை அதிகரிக்க உதவும் நோக்கத்து டன் உற்பத்தியாளர் -விற்பனையாளர் சந்திப்புக்கு நிகழ்ச்சியை வியாழனன்று (பிப்.27) நபார்டு ஏற்பாடு செய்திருந்தது. இந்த சந்திப்பில் சுமார் 40 உற்பத்தியாளர்க ளும், 20 விற்பனையாளர்களும் பங்கேற்றனர். நபார்டு சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியை நபார்டு தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் துவக்கி வைத்தார். 24 மந்திரா, வேகூல், கீரைக் கடை, ராயல் ஃபுட்ஸ், லாரன்ஸ் டேல் அக்ரோ, சன்னி பீ எக்ஸ்போர்ட்ஸ், பயக்ரி உள்ளிட்ட பல விற்பனையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர். இந்த உற்பத்தியாளர் விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சியினையொட்டி, நபார்டு அலுவலகத்தில் ஒரு கண்காட்சி மற்றும் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தேங்காய் மற்றும் பிற எண்ணெய்கள், மசாலா, தினை மற்றும் கரிம பொருட்கள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பிற தானியங்கள் மற்றும் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டன.