ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம், சேலம் சக்தி கைலாஷ் கல்லூரி மற்றும் சேலம் மனநிறைவு மையம் ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் செயல்திட்டம் சமர்ப்பித்தல் சார்ந்த இறுதிப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சிபிஎஸ்இ, மெட்ரிக், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்கள் உட்பட 150 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவர் இரா.தருண்பிரசாத் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றார். அவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.