tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வதந்தி.. நம்பாதீர்கள்..ஒபிஎஸ் பதற்றம்!

சென்னை, மார்ச் 15- முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல் வம் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆத ரவு தெரிவித்துள்ளதா கவும் ஊடகங்களில் செய்தி பரவின. தங்களின் தாமரைச்சின்னத்தில் போட்டி யிடுமாறு பாஜக கூறியதாகவும், இத னால் ஓ.பி.எஸ்.இந்த முடிவை எடுத்த தாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், “மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பரவும் செய்தி உண்மைக்குப் புறம்பானது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் குறித்த முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தி யாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தரமுடியும் என்பதால் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண் டும் என்பதே எங்கள் விருப்பம் என்றும் பதறியுள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம்
தேர்தல் ஆணையம்
 பதிலளிக்க உத்தரவு

நாடாளுமன்ற தேர் தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படா ததை எதிர்த்து, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், இந்தமனுதள்ளு படி செய்யப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் துள்ளது. இந்த மனுவை விசாரித்த தலை மை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பத்திரம்: த.வெ.க. கேள்வி

“ஊழல்வாத அர சியலின் உதாரணம்.. பாஜகவை கேளுங் கள்.. திமுகவை கேளுங் கள்.. நம் நாட்டை ஆளும் பாஜக மற்றும் நம் தமிழ்நாட்டை ஆளும் திமுக கட்சிகளிடம் நாம் கேள்விகள் கேட்க வேண் டும். இப்படி கார்ப்பரேட் நிறுவனங்க ளிடம் இவ்வளவு கோடியில் பணம் பெற் றால் நீங்கள் என்ன நன்மைகள் மக்களுக்கு செய்வீர்கள் என்று கேளுங்கள்” என்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது.