சென்னை, ஆக. 13 - உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 27 அன்று அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு கூகுள் நிறுவனத் தின் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு தொழி லதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இதையொட்டி, தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செவ்வாயன்று (ஆக.13) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த அமைச்சரவைக் கூட்டத் தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலி னின் வெளிநாட்டுப் பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப் பட உள்ள வளர்ச்சித் திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணி களை வேகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்திந்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதேபோல சில திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 44 ஆயிரத்து 125 கோடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யுள்ளது. வாகனத் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, பேட்டரி தயாரிப்பு ஆகிய தொழில்களில் 15 ஒப்பந்தங் களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 24 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.