சென்னை, அக். 7 - சென்னை தலைமைச் செய லகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல்துறை சார்பில் 56 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செல வில் கட்டப்பட்டுள்ள 169 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலை யங்கள் மற்றும் 2 காவல்துறை கட்ட டங்களை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதேபோல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 18 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 10 குடி யிருப்புகள் மற்றும் 7 கட்டடங்கள், 3 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவுக் கட்டடத்தையும் காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், தலைமைச் செய லாளர் நா. முருகானந்தம், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழ கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், தடய அறிவியல் துறை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் வி. சிவப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.