tamilnadu

img

ரூ. 1192 கோடியிலான புதிய திட்டப்பணிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஆக. 12- ரூ. 1192 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிவுற்ற ரூ. 800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதில், சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய நடைபாதை, யானைக் கவுணி ரயில்வே மேம்பாலம், மெரினா லூப் சாலை கடற்கரைப் பகுதியில் நவீன மீன் அங்காடி, புதிய பூங்காக்கள், புதிய விளை யாட்டு மைதானங்கள், புதிய பேருந்து நிலையங்கள், சுரங்கப்பாதை, புதிய பாலங்கள்.

ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடம், ஆகாய நடைபாதை, ஏரி மற்றும் கால்வாய் சீரமைப்பு, தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், புதிய அலுவலக கட்டடங்கள், அறிவுசார் மையங்கள், பொதுக் கழிப்பிடங்கள், புதிய குடிநீர் திட்டப்பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 104 முடிவுற்ற திட்டப்பணிகள் அடங்கும். இவை மக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை களில் 144 பேருக்கு பணிநியமன ஆணைகள் மற்றும் 27 பேருக்கு கருணை அடிப்படை யிலான பணி நியமன ஆணைகளை வழங்கி, 68 புதிய வாகனங்களையும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.