tamilnadu

img

ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,224 ஆக உயர்வு

சென்னையில் உள்ள ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,224 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,286 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. 14,316 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் மொத்தமாக 17,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 139 பேர் உயிரிழந்துள்ளனர்; 8,900 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 31 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 2,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 2,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 9 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 2,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 20 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 1,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 27 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 1,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாரில் 1,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6 பேர் உயிரிழந்துள்ளனர்.