tamilnadu

img

என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை

சென்னை:
சென்னை அயனாவரத்தில் கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான சங்கர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.சென்னை புது ஆவடி சாலையில், ரவுடி சங்கரை காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது காவலர் முபராக் என்பவரை, சங்கர் அரிவாளால் தாக்கியதாகவும் இதனால் ,உடனிருந்த காவல் ஆய்வாளர் நட்ராஜ் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதில்  சங்கர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..அதையடுத்து சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காவலர் முபாரக் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.ரவுடி சங்கர் மீது 4 கொலை வழக்குகள்,4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி வழக்குகள் மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண் மையில் பல்பொருள் அங்காடி உரிமையாளரை மாமூல் கேட்டு அரிவாளால் தாக்கிய வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;