tamilnadu

img

நறுவீ மருத்துவமனையில் ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை

நறுவீ மருத்துவமனையில் ரோபோ மூலம்  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை

வேலூர், அக்.17- வேலூர் நறுவீ மருத்துவமனையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 54 வயது பெண் நோயாளி பசுதா சத்பதிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஸ்மித் & நெஃப்யு நிறுவனம் தயாரித்த அதிநவீன ரோபோ கொண்டு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் மருத்துவ மனை தலைவர் ஜி.வி.சம்பத் தெரி விக்கையில், 5 ஆண்டுகளாக இயங்கி வரும் இம்மருத்துவமனை வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களி லிருந்தும் வரும் நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை, நுரையீரல், குடல் நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இருதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சிறு நீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட பசுதா சத்பதி பல்வேறு மருத்துவமனைகளில் பலனில்லாமல் வேலூர் நறுவீ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பரி சோதனையில் அவரது கால் மூட்டு முற்றி லும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை இருந்ததால், ரோபோ மூலம் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக அறுவை சிகிச்சை செய்யும்போது அதிக ரத்தப்போக்கு, திசு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்வதால் ரத்தப்போக்கு மற்றும் திசு பாதிப்பு தடுக்கப்படுகிறது. எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை ரோபோ துல்லியமாக கணித்து தருவதால் குறைந்த நேரத்தில் அறுவை சிகிச்சை முடிக்க முடிகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டாவது நாளிலேயே அந்த பெண் நோயாளி நடக்கவும், மூன்றாவது நாளில் மாடிப்படி ஏறி இறங்கவும் தொடங்கினார். இதே போன்று முழு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்ய முடியும் என்று தெரி விக்கப்பட்டது. தீ விபத்து பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வுத் திட்டத்தை தமிழ்நாடு தீ பாதுகாப்பு ஆணை யம் அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேசிய மாணவர் படையினருக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட வுள்ளது. முதற்கட்டமாக வேலூர் நறுவீ மருத்துவமனையில் இந்த பயிற்சி கள் விரைவில் நடைபெற உள்ளன. இந்த நிகழ்வில் மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், எலும்பியல் துறை தலைமை மருத்துவர் டாக்டர் வெர்னன் லீ, தலைமை இயக்குதல் அலுவலர் சர வணன் ராமன், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.