சென்னை, ஜூன் 30 - பள்ளிக்கரணை பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். வேளச்சேரி - தாம்பரம் இடையேயான வேளச்சேரி சாலையின் இரு மார்க்கத்திலும் தினசரி பல்லாயிரக்கணக்கான வாக னங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக பள்ளிக்கரணை பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி முதல் குளம் வரை சாலை விரி வாக்க பணிகள் முடிவடையவில்லை. இதனால் இந்த பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும். இந்த பகுதி யில் இரு மார்க்கத்திலும் மாடுகள் கட்டுப் பாடின்றி சுற்றித்திரிகின்றன. மைய தடுப்பை யொட்டி இரவு, காலை நேரங்களில் மாடுகள் படுத்து கிடக்கின்றன. இத னால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படு கின்றனர். மாடுகள் கூட்டமாக திடீரென்று சாலையை கடப்பதாலும், துள்ளிக்குதித்து ஓடுவதாலும் வாகன ஓட்டிகள் நிலை குலைந்து விடுகின்றனர்.
லாரி, பேருந்து போன்ற பெரிய வாகனங்கள் திடீரென்று பிரேக் அடித்து நிற்கும் போது, அவற்றின் பின்னால் வரும் சிறிய ரக வாகனங்கள், ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் அவ்வப்போது விபத்து நிகழ்வது சர்வ சாதாரணமாக உள்ளது. எனவே, மாடுகள் நடமாட்டத்தை முழுமையாக தடுத்து, தடையற்ற, விபத்தற்ற பயணத்திற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோருகின்றனர். மாநக ராட்சி நடவடிக்கை எடுக்குமா?