tamilnadu

சாலையை சீரமைக்க வலியுறுத்தி பட்டமந்திரியில் சாலை மறியல்

திருவள்ளூர், ஜூலை 15- மீஞ்சூர்  பிடிஒ அலுவலகம் முதல்  பட்டமந்திரி வரை சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொது மக்கள் திங்களன்று (ஜூலை15),  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூரில் இருந்து திருவொற்றியூர் செல்லும் நெடுஞ்சாலையில் பட்டமந்திரி முதல் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை யில் உள்ள சுமார் 2 கி.மீ. சாலையை சீரமைப் பதில் அரசும் , அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர். விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 8 மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையை சீரமைக்காததால் அப்பகுதியே தூசி மண்டலமாக மாறியிருக்கி றது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சாலையை சீரமைப்பதில்  கால தாமதமாகுவதால்,  கிராம மக்கள், நடந்து செல்ல கூட முடியவில்லை.

கனரக வாகனங்களின் அதிகம் இச்சாலையில் பயணிக்கிறது. அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பழுதான சாலையில் பயணிக்கும் பல  வாகனங்களும், பாதசாரிகளும் விபத்துக் குள்ளாகின்றனர். இதன் விளைவாக பலருக்கு ஊனங்களும் , மரணங்களும் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத் துறையினர்  பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் திங்களன்று  (ஜூலை 15), மீஞ்சூரை அடுத்த பட்ட மந்திரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் மீஞ்சூர் ஒன்றிய செயலா ளர் இ.ஜெயவேலு, சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் ஜி.வினாயகமூர்த்தி, கே.வெங்கடேசன், சத்தியமூர்த்தி உட்பட பலர்  கைதாகினர்.