tamilnadu

img

ஐசிஎப் கான்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் உதயம்

சென்னை, ஏப். 29 - ஐசிஎப் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கென்று ‘ஐசிஎப்  யுனைடெட் கான்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்’ உதயமாகி உள்ளது. ஐசிஎப்-ல் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த  ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு மாதத்தில் குறிப்பிட்ட நாளில் ஊதியம் வழங்காமல், வெவ்வேறு தேதிகளில் ஊதியம் வழங்கப்படுகிறது.

மேலும் சட்டச் சலுகைகள் இன்றி தொழி லாளர்கள் உள்ளனர். இந்நிலையில் சிஐடியு முன்னெடுப்பில், ஒப்பந்த ஊழியர்களுக்கான பேரவைக் கூட்டம் சனிக்கிழமையன்று (ஏப்.27) நடை பெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு என்.வி.கிருஷ்ணராவ் தலைமை தாங்கினார். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, ஐசிஎப் யுனை டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செய லாளர் பா.ராஜாராமன், பொருளாளர்  கே.டி. ஜோஷி, வி.மோகன், ஜெ.கதிரவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த பேரவையில் ‘ஐசிஎப் யுனை டெட் கான்ட்ராக் ஒர்க்கர்ஸ் யூனியன்’ என்ற சங்கம் தொடங்கப்பட்டது. சங்கத்தின் தலை வராக சி.திருவேட்டை, செயலாளராக என்.வி.கிருஷ்ணராவ், பொருளாளராக விஜய குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.