காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வருவாய் துறை சங்கங்கள் பேரணி
கடலூர், ஜூன் 25- கடலூரில் வருவாய் துறை சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பாக, காலிப் பணி யிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து நிலை யிலான காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும், பணி பாது காப்பு வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்தை 25 சதவீத மாக மீண்டும் உயர்த்தி வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக பணி நியமனத்தை கைவிட்டு அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஜூலை முதல் தேதியை வருவாய் துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கடலூர் அண்ணா பாலம் அருகில் இருந்து தொடங்கிய பேரணி கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. பின்னர் வரு வாய் துறை ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ், கிராம நிர்வாக அலு வலர் சங்கத்தின் செந்தில் முருகன், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் திருமால்வளவன், நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் நீல்ராஜ், வரு வாய் கிராம ஊழியர் சங்கத்தின் தினகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டத்தில் பணிபுரியும் பெரும்பாலான வருவாய்த்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மகேஷ், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் செந்தில் முருகன், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் திருமால்வளவன், நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் நீல்ராஜ், வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் தினகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பூபாலச்சந்திரன், கூட்டமைப்பு நிர்வாகிகள் பக்கிரி சாமி, ஜான் போஸ்கோ, விஸ்வநாதன், கார்த்திகேயன், ரவி, அலெக்ஸ், சிவலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் காசி நாதன், அனைத்து குடியிருப்போர் நல சங்கங்க ளின் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் மருதவாணன், பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.