tamilnadu

img

ஊழல் வழக்கில் சிக்கியவருக்கும் ஓய்வு வயது உயர்வு: அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை:
ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியுள்ளது.

நேர்மையாகவும் நியாயமாகவும் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை ஒரு ஆண்டுகள் நீட்டிப்பதில் எந்த தவறும் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார்.அதே வேளையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி,ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலையில் உள்ளவர்களுக்கும்  ஓய்வு பெறும் வயது நீடிக்கப் பட்டுள்ளதாக  அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது அரசியலமைப்புச் சட்டத் திற்கும், மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்களுக்கும் எதிரானது என்றும் எனவே ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளவர்களுக்கான ஓய்வு பெறும் வயதை நீட்டித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண் டுள்ளார்.இதுதொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வாரத்திற்குள் தமிழக அரசு இதுகுறித்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

;