சென்னை, நவ.22- கோவையில் சிறு-குறு தொழில் முனைவோரின் வீட்டை ஜப்தி செய்த தனியார் வங்கியின் அராஜகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட னம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரு மாறு:
கோவை மாவட்டம், ரத்தினபுரி பகு தியில் கணேஷ் ஆனந்த் என்ற முது நிலைப் பொறியாளர் பட்டதாரி 2010-ஆம் ஆண்டு முதல் டிராமோஸ் ஷாஃப்ட் என்ற பெயரில் சிறுதொழில் நடத்தி வரு கிறார். தொழில் அபிவிருத்திக்காக 2017- ஆம் ஆண்டு ஆர்.பி.எல். என்ற தனி யார் வங்கியில் தனது வீட்டை அட மானம் வைத்து ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கொரோனா காலம் வரை கடனுக்கான ஈவுத்தொகை யை முறையாக செலுத்தி வந்துள்ளார். கொரோனாவினால் பெரும் தொழில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இவரால் மாதாந்திர ஈவுத் தொகையினை செலுத்த முடியவில்லை. இருப்பினும், ரூ. 10 லட் சம் வரை செலுத்தியுள்ளார். மேலும் தனது கடனை மறு சீரமைப்பு செய்து தர வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால், வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது.
ஒன்றிய அரசின் சார்பில் சிறு-குறு தொழில் சீரமைப்புக்கு வழங்கப்பட்ட கூடுதல் கடன் தொகையை இவருக்கு வழங்காமல் வங்கி நிர்வாகம் கடன் பாக்கிக்கு வரவு வைத்துக் கொண்டுள் ளது. இந்நிலையில் வங்கி நிர்வாகம் வழக்கறிஞர் மற்றும் முகம் தெரியாத அடியாட்களோடு வந்து கணேஷ் ஆனந்த், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்களை இரவுநேரம் என்று பாராமல் வீட்டை விட்டு வெளியேற்றி சீல் வைக்கும் அரா ஜக நடவடிக்கையை மேற்கொண்டுள் ளனர். சிறு தொழில் செய்து நாணய மாக வசித்து வந்த குடும்பத்தை சமூக விரோதிகளைப் போல வீட்டை விட்டு வெளியேற்றி நடுவீதியில் நிறுத்தி யுள்ள வங்கியின் நடவடிக்கைக்கு வன் மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றிய அரசின் தவறான கொள்கை களாலும், கொரோனா பாதிப்புகளா லும் சிறு-குறு தொழில்கள் நெருக்கடி யில் சிக்கி அதன் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் விழி பிதுங்கி தவித்து வரும் சூழ்நிலையில் சிறு-குறு தொழில்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்கு பதிலாக இத்தகைய அராஜக மான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்வதை ஒன்றிய அரசு உட னடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், கணேஷ் ஆனந்த் வீட்டுக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி அவரிடம் வீட்டினை ஒப்படைக்கவும், அவரது கடன் பாக்கிக்கு, நிதிச் சொத் துக்களைப் பத்திரப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் மற்றும் பாதுகாப்பு வட்டிச் சட்டத்தின் (SARFAESI)-படி குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென சிபிஎம் மாநி லச் செயற்குழு வலியுறுத்துகிறது. எதிர் காலத்தில் கடன் பாக்கிக்காக வீடுகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்து கிறது.