திருவண்ணாமலை, மே 19 - திருவண்ணாமலை அடுத்த துர்க்கைநம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த நர சிம்மன் (வயது 45). இவர் திங்களன்று (மே 18) உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். இறந்த நரசிம்ம னின் அண்ணன் முருகன், சட லத்தை வடஆண்டாப்பட்டு கிராம ஆதிதிராவிடர் குடி யிருப்பு பகுதியில் புதைப்ப தற்கு குழி தோண்டினர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பச்சையம்மாள், அவரது கணவர் பழனி வேல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிதுள்ளனர். இதனால் முருகன் தரப்பினர் பச்சை யம்மாள் தரப்பினரை தாக்கினர். இதனை அடுத்து பச்சை யம்மாள் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இத னையடுத்து காவல்துறை யினரும், வருவாய்த்துறை யினரும் இறந்தவர் உற வினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடி யிருப்பு பகுதியில் இறந்த வர் உடலை அடக்கம் செய்ய கூடாது என எச்ச ரித்ததோடு, தோண்டிய குழி யையும் மூடினர். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவியது.