tamilnadu

மாற்றுப் பாலினத்தவர்க்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய தமிழக அரசுக்கு வேண்டுகோள்

சென்னை, பிப்.21- மாற்றுப்பாலினத்தவர்க்கு இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்திந்  திய ஜனநாயக மாதர் சங்கம், தமி ழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்  துள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்  டம் தஞ்சாவூரில் 18,19 ஆகிய தேதி களில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்  வருமாறு: மாறிய பாலினத்தவர் (திரு நங்கையர், திருநம்பியர்) பயன் பெறும் வகையில் ஜனவரி 9 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசு நடை முறைப்படுத்த வேண்டும்.

திரு நங்கைகளுக்கான 1 சதவீத கிடை மட்ட இட ஒதுக்கீட்டிற்கான, சென்னை  உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய பரிந்துரை தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்.  நாட்டின் முன்னோடியாக திரு நங்கைகளின் மேம்பாட்டின் மீது  அக்கறை கொண்டு செயல்பட்டு  வரும் தமிழக அரசின் முன்னெ டுப்புகளில் மிக முக்கியமாக இந்த  இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.  கடந்தமுறை சுமார் 130 திரு நங்கைகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியும் மிகவும் பிற்  பட்டோர் ஒதுக்கீட்டின் பேரில்  வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  

இந்த முறையும் பல நூற்றுக்க ணக்கான, படித்த திருநங்கைகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தயாராகி வருகின்றனர். இவ்வாறு  உயர்கல்வி படித்து கண்ணியமான  வேலை வாய்ப்புகளுக்கு முயன்று  வரும் சூழலில் 1 சதவீத கிடைமட்ட  இடஒதுக்கீடு (ஹாரிசான்டல் ரிசர்  வேசன்) வழங்குதல் உதவியாக இருக்கும். பல சமூக இன்னல்களுக்கு உள்ளாக்கப்படும், மாறியப்பாலி னத்தவர் கணக்கெடுப்பு சவாலு டையதாக இருப்பதால், மேற்  குறிப்பிட்டுள்ள கண்ணிய வாழ்க்  கையை பெற முயலுபவர்களுக் கும், எதிர்காலத்தில் இன்னும் அதி கம் பேர் பயன்பெறும் அடிப்படை யில் இந்த அரசு முடிவெடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு இந்த  சூழலில் இடஒதுக்கீடு வழங்கியுள்  ளதை கருத்தில் கொள்வது அவ சியம்.  100 நாள் வேலைத் திட்டம் முடக்கம் கொரோனா பொதுமுடக்கத் தின் போது சொந்த கிராமங்க ளுக்கு திரும்பிய சுமார் 5 கோடி இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 100 நாள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி வேலை உறுதித்  திட்டத்தின் கீழ் வேலை கோரிய நிலையில் ஊரக வேலை உறுதி திட்டத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக மோடி அரசு அதை தீவி ரமாக முடக்க முயற்சிக்கிறது.

கோடிக்கணக்கான தொழிலாளர் களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான ஊதிய முறையை  திணித்துள்ளது. 100 நாள் வேலை  அட்டை வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையில் தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என பிரிக்கின்றனர்.

அதன் விளைவாக 10 கோடிக்கும் அதிகமான தொழி லாளர்கள் ஆதார் அடிப்படையில்  ஊதியமுறைக்கு தகுதியற்றவர் கள் என அறிவிக்கப்பட்டு வேலை  செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை மறுக்கப்படுகின்றன. இணைய இணைப்பு தொடர்பு இல்லாத கிராமப்புற இந்தியாவின் பெரும் பகுதிகளில் கிட்டத்தட்ட இரண்டு கோடி பேருக்கு ஆன்லைன் பதிவு  இல்லாமல் ஊதியம் மறுக்கப்படு கின்றது. கிராமப்புற துயரம் அதி கரித்துள்ள இந்த நேரத்தில் ஆதார்  அட்டையிலான ஊதிய முறையை கட்டுப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும்.

வேலை உறுதிச் சட்  டத்தில் பயனாளிகளுக்கு சம்பள  பாக்கியை உடனடியாக வழங்கிட  வேண்டும் என்று வலியுறுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் வகுப்புவாத பாஜக அரசை வீழ்த்தி  மத்தியில் மதச்சார்பற்ற அரசு  அமைய, தேர்தல் பணியாற்று வோம் என்றும் மாதர் சங்கத்தின் மாநிலக் குழு அழைப்பு விடுத்துள்  ளது.

இக்கூட்டத்தில் அகில இந்  திய துணைத் தலைவர் உ.வாசுகி,  அகில இந்திய துணைச்செயலா ளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர்  எஸ்.வாலண்டினா. மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா, மாநில பொருளாளர் ஜி.பிரமிளா,  மாநில துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.