சென்னை,நவம்பர்.18- ஆராச்சி மாணவர்களை சொந்த பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆராய்ச்சி மாணவர்களை தங்களது சொந்த பணிகளுக்கு பயன்படுத்தும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்ட ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்கல்விதுறை எச்சரிக்கை.
ஆராய்ச்சி மாணவர்களை தங்களது வீட்டு வேலைகளை செய்யுமாறு பேராசிரியர்கள் துன்புறுத்துவதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.