tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை

காஞ்சிபுரம், ஜூன் 28-  காஞ்சிபுரம் மாவட்ட த்தில், மாற்றுத் திறனாளி களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம்  கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை தீர்ப்ப தற்காக மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் மாதாந்திர சிறப்பு குறைதீர் கூட்டம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெறும் கூட்டத்திற்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கோரிக்கை களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். குறைதீர் கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க வேண்டும், ஒவ்வொரு அலுவலகத்திலும் வீல் சேர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தின் போது சைகை மொழி  பெயர்ப்பாளர் உடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்டம் முழு வதும் கோட்டாட்சியர்களை சந்தித்து மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ள னர். இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியரை சந்தித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா தலைமையில் மனு அளித்தனர்.  மாவட்டத் தலைவர் வி.முனுசாமி, செயலாளர் வி.அரிகிருஷ்ணன், பொரு ளாளர் பி.பி பாலாஜி, துணைத் தலைவர் கே. பச்சையப்பன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பின ர்கள் ஆர்.தாமோதரன், என்.அன்பழகன்,வி.ஏழுமலை, டி.சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.