சென்னை:
மாநிலத்தில் சுற்றுலாத் தொழில் புத்துயிர் பெற்று திகழ்வதற்காக, புதுமையான யுக்திகளைக் கையாண்டு தொழில் வளர்வதற்கு 250 கோடி ரூபாய் நிதி உதவியை தமிழ்நாட்டிற்குச் சிறப்பு நிதி மானியமாக ஒதுக்குமாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டம் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது, அரசு கூடுதல் தலைமைச் செயலர் (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங் கள் துறை) விக்ரம் கபூர், சுற்றுலா ஆணையர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் த.பொ. ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில், விருந்தோம்பல் தொழிலுக்கான மதிப்பீடு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமைப்பிற்கான தரவுத் தளம் “சாத்தி” மற்றும் விருந்தோம்பல் தொழில்துறையின் தேசிய ஒருங்கிணைந்த தரவுத்தளம் “நிதி” பல்வேறு விருந்தோம்பல் சேவைகள் மற்றும் வசதிகளை மின்னணு முறையில் வழங்க வழி செய்கிறது. நிதி என்ற தரவுத் தளத்தில் இதுவரை 1082 அலகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற அனைத்து விடுதிகளையும் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.பயண மற்றும் சுற்றுலா தொழில் அதிக பின்னடைவை அடைந்திருந்த போதும், இதுபோன்ற எதிர்பாராத அதிர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்ளவும், நிலைத்த மற்றும் பொறுப்புள்ள சுற்றுலாவை முழுவதுமாக தழுவும் வகையில் நிச்சயம் மீளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.