tamilnadu

img

ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

செங்கல்பட்டு, செப். 6- செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலை யில் கிடப்பில் கிடக்கும் ரயில்வே சுரங்கப்  பாதை பணியை விரைந்து முடித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை  விடுத்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் இ.சங்கர் மக்களவை உறுப்பினர் செல்வத்திடம் மனுஅளித்துள்ளார். செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில்  ரயில்வே பாதை யைக் கடக்கக்  கடந்த எட்டு ஆண்டுகளுக்கு  முன்பு  மேம்பாலம் அமைக்கப்பட்டது. பாத சாரிகள் ரயில் பாதையை கடக்க மேம்பா லத்தில் படிகள் ஏதும் அமைக்கப்படாத  நிலை யில் சுரங்கப்பாதை அமைத்திட பணிகள்  நடைபெற்று வந்தது. இரண்டு ஆண்டுகள்  காலதாமதத்திற்கு பின்னர் சுரங்கப்பாதை யின்  பணியினை ரயில்வே நிர்வாகம் முடித்து விட்டது. ஆனால் ரயில் பாதையின் இருபுறங்க ளிலும் இணைப்புச் சாலை அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை  துவங்காமல் உள்ளது. சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத நிலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நோயாளிகள், மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் ரயில் பாதையை ஆபத்தான முறையில் கடக்கவேண்டியுள்ளது. இருசக்கர வாக னம் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் 2கி.மீ  தூரத்திற்கு சுற்றிவரும் நிலை உள்ளது. இத னால் அனைத்து தரப்பு பொதுமக்களும் நாள்தோறும் பாதிக்க பட்டுவருகின்றனர். ரயில்வேத்துறை சுரங்கப்பணிகளை முடித்து மூன்று ஆண்டுகள் ஆகியும்,  இணைப்புச் சாலை  அமைக்கப்படாமல் காலம் கடத்துவது என்ற கேள்வி மக்கள் மத்தி யில் எழுந்துள்ளது. ரயில்வே சுரங்கப்பாதை யில் இணைப்புச்சாலை  அமைக்க உடனடி யாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.