tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிவாரணம்
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூன் 23- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், ஏரல்  வட்டம், முக்காணி  கிராமம், தூத்துக்குடி - திருச்செந்தூர்  சாலையில் சாலையோரமாக நின்று, தெருக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது ஜூன் 23  அன்று காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி யிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த முக் காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காய மடைந்த அமராவதி, பார்வதி ஆகிய இரு வரும் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்  தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேத னையுமடைந்தேன்.

இவ்விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம்  ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருப வருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலி ருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள் ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுகவிற்கு மஜக ஆதரவு

சென்னை, ஜூன் 23- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக  சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி  சார்பில் அபிநயா ஆகியோர் உட்பட 64  பேர் வேட்மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அக் கட்சியின் மாநில செயலாளர்கள் ஷஃபி, இப்ரா ஹிம் தலைமையில் தேர்தல் பணிக்குழு  அமைக்கப்பட்டுள்ளதாக மஜக தலை வர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

விஷச் சாராய பலி
கமல்ஹாசன்  நேரில் ஆறுதல்

கள்ளக்குறிச்சி, ஜூன் 23- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயத்தை வாங்கிக் குடித்த பல ருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச் சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன.

 இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள  மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.  

மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரி ழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை படிப்  படியாக உயர்ந்து தற்போது 56 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஷச் சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர் களை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை வர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல்  கூறினார்.  

மேலும் அவர்களுக்கு வழங்கப்  படும் சிகிச்சைகள் குறித்து கமல்ஹாசன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

காட்டு யானை மிதித்து பலியானவர் ரப்பர் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்

சென்னை, ஜூன் 23- கன்னியாகுமரி மாவட்டம், விள வங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட கோதையாறு பகுதியில், ரப்பர் பால் வெட்டுவதற்கு சென்ற மணிகண்டன் என்பவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது.

சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த தும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பெர்ட், “யானை தாக்கி பலியான குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க  வேண்டும்” வலியுறுத்தினார்

இதற்குப் பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம்,  தமிழக அரசு ரப்பர் கழகம் சார்பில் ரூபாய்  10 லட்சம் என மொத்தம் 20 லட்சம்  நிவாரணம் உடனடியாக வழங்கப்பட்ட தாக பதிலளித்தார்.

மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

சென்னை, ஜூன் 23- அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர கம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவ லர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

“முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும்  அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின்  திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அனைத்து  வகை அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணவர்களில் எழுதும் திறன்,  வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர் களின் விவரங்கள் கண்டறியப்பட்டு இக்  கல்வியாண்டிலும் பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும்.

இது தொடர்பான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யு மாறு அனைத்து தலைமை ஆசிரியர் களுக்கும் அறிவுறுத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என்று  சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.