வெம்பக்கோட்டை அருகே குண்டாயிருப்பில் சனிக்கிழமை நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.