சென்னை, ஜூலை 2- தமிழ்நாடு சட்டப்பேர வையில் வெளியிட்ட அறி விப்பின் அடிப்படையில், தமி ழக அரசின் விண்வெளி வரை வுக் கொள்கை வெளியிடப் பட்டுள்ளது. இதில் மதுரை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது
இஸ்ரோவின் கூடுதல் ராக்கெட் ஏவுதளம், குலசேக ரப்பட்டினத்தில் அமைக்கப் படுகிறது. எனவே, அருகில் உள்ள மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, விருது நகர், திருநெல்வேலியை மேம் படுத்தும் வகையில், இந்த மாவட்டங்களை ‘ஸ்பேஸ் பே’ என்று அறிவித்துள்ளது டன், அந்த மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங் களை மேம்படுத்த சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது.
மேலும், முதலீடு அடிப்ப டையில் நிறுவனங்கள், ரூ. 50 கோடி முதல் 300 கோடி வரை முதல் வகையாகவும், ரூ. 300 கோடிக்கு மேல் இரண்டாம் வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் விண் வெளித் துறையில் முதலீடு செய்யும், குறிப்பாக கிரீன் பீல்டு மற்றும் விரிவாக்க திட்டங்கள் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சிறப்பு ஊக்கச் சலுகைகள் வழங் கப்படும்.
‘ஸ்பேஸ் பே’யில் உள்ள நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக 10 சதவிகிதம் மற்றும் 7 ஆண்டுகளில் திரும்பிச் செலுத்தும் வகை யில் அவகாசம் வழங்கப்படுகிறது.
நிலத்தைப் பொறுத்த வரை, நகரங்களின் தரத் துக்கு ஏற்ப, 50 சதவிகிதம் வரை நிலத்தின் மதிப்பில் சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல், நிலம் தொடர் பான பதிவில் முத்திரைக் கட்டண சலுகை, மின்சாரக் கட்டணத்தில் சலுகை அளிக் கப்படுகிறது.
அதேபோல், ரூ.300 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு ஊக்கச் சலுகை களையும் தமிழக அரசு அறி வித்துள்ளது. மேலும், விண் வெளித் தொழில் திட்டங்க ளுக்கு உதவிகளை வழங்க ‘டிட்கோ’ நிறுவனம் நியமிக் கப்பட்டுள்ளது. இதன்மூலம், தேவையான அனுமதிகளை தமிழ்நாடு வழிகாட்டி நிறு வனத்தின் ஒற்றைச் சாளர அனுமதி இணையம் மூலம் பெற முடியும். மேலும், அனு மதிக்கான கட்டணங்களில் 50 சதவிகிதம் சலுகை அளிக் கப்பட்டுள்ளது.
குறிப்பாக, புத்தாக்க நிறுவனங்கள் விண்வெளித் துறையில் ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகை களை தமிழக அரசு இந்த வரைவுக் கொள்கை மூலம் வெளியிட்டுள்ளது.
இக்கொள்கை மீதான கருத்துக்கள் பெறப்பட்டு விரைவில், திருத்தப்பட்ட இறுதி அறிக்கை வெளியிடப் படும் என தெரிகிறது.