சென்னை,அக்.22 மருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பான நான்காவது தேசிய மாநாடு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. 2010ஆம் ஆண்டுக்கான இந்த மாநாட்டை மருத்துவ சட்டங்கள் தொடர்பான கல்வி, தகவல் மற்றும் சேவைகளை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு வழங்கும் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிசின் அண்ட் லா நிறுவனம் நடத்தியது. நீதிபதி குப்தா அவர்கள் தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மருத்துவர் ரவிசங்கர் கூறுகையில், மருத்துவத் துறையில் பணி யாற்றுபவர்களை பாதிக்கும் வகையில் உள்ள மிகமுக்கிய சட்டச் சிக்கல்களை தீர்ப்பதற்காக இந்த மாநாடு நடைபெறு கிறது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகள் மீது ஒரே நேரத்தில் பல நீதி மன்றங்களில் வழக்கு தொடுப்பதைத் தவிர்ப்பதற்காக மருத்துவ தீர்ப்பாயத்தை அமைப்பது, தற்போது கடுமையாக உள்ள முன் கருத்தரித்தல் மற்றும் பிறப்பு சார்ந்த ஆய்வுகள் குறித்த சட்டங்களை மறுபரி சீலனை செய்தல் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கான உணர்திறன் சோதனை களை ரத்து செய்தல் போன்ற மிகமுக்கிய அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது என்றார்.